குஜராத்தில் போராடிய மாணவர்களைத் தாக்கிய ஏ.பி.வி.பி அமைப்பினர்!

 

குஜராத்தில் போராடிய மாணவர்களைத் தாக்கிய ஏ.பி.வி.பி அமைப்பினர்!

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ சார்பில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அகமதாபாத் நகரில் உள்ள ஏ.பி.வி.பி அலுவலகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஏ.பி.வி.பி அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

 

கையில் இரும்பு கம்பிகளுடன் வந்த ஏ.பி.வி.பி குண்டர்கள் என்.எஸ்.யு.ஐ மாணவர் அமைப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். போலீசார் முன்னிலையிலேயே ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குதல் நடத்தியது பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் என்.எஸ்யு.ஐ குஜராத் பொதுச் செயலாளர் நிகில் சவானி உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.