கிள்ளிக் கொடுத்த எடப்பாடி… உள்ளாட்சி தேர்தலில் இருக்கு உள்குத்து..!

 

கிள்ளிக் கொடுத்த எடப்பாடி… உள்ளாட்சி தேர்தலில் இருக்கு உள்குத்து..!

தீபாவளி பண்டிகை வெகுமதியே இப்போது வழங்கி இருக்கிறார்கள் என ஆதங்கமாக சொல்லிட்டு போயிருக்கிறார்கள். பிறகு அம்மா இல்லாத அதிமுக இனி அம்போ தான் எனக் கிளம்பி இருக்கிறார்கள்.

அதிமுகவில் உள்ள பேச்சாளர்கள், கலைக்குழுவை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது பணமூடிப்பு வழங்குவது வழக்கம்.

அதாவது நட்சத்திர பேச்சாளர்களுக்கு ரூ.1,00,000 பேச்சாளர்களுக்கு 75,000, பேச்சாளர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கினார். அதுவும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னாடியே வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பேச்சாளர்களுக்கு பணம் முடிப்பு வழங்கப்படுமா? என்பதே ரொம்ப கேள்விக்குறி இருந்தது. 

OPS

தீபாவளி வரைக்கும் பணமுடிப்பு வழங்கவில்லை. திடீரென சில தினங்களுக்கு முன்தான் வழங்கினார்கள். இதனால், சந்தோஷமான நட்சத்திர பேச்சாளர்கள் முத்துலிங்கம், ஆர்.சுந்தரராஜன், நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள், பேச்சாளர்கள், கலைக்குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. 

அதுவும் ஜெயலலிதா கடைப்பிடித்த வழக்கத்தை மாற்றி நட்சத்திர பேச்சாளர்களுக்கு வெறும் ரூ.40,000 தான் பணமூடிப்பு வழங்கியுள்ளார்கள். பேச்சாளருக்கு ரூ.25,000 அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.20,000 தான் வழங்கியுள்ளார்கள். இந்த தொகையும் முழுதாக வழங்கவில்லை.

அதாவது நட்சத்திர பேச்சாளர்களுக்கு வழங்கிய ரூ.40,000த்தில் ஜி.எஸ்.டி. என்று ரூ 4,000 பிடித்து 36,000, பேச்சாளருக்கு ஜிஎஸ்டி பிடித்தம் போக 20,000, அடுத்ததாக உள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி.பிடித்தம் போக ரூ15,000 தான் கிடைத்துள்ளது. இந்த தொகையை பார்த்து பேச்சாளர்கள் எல்லாம் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

 edappadi

அடுத்து உள்ளாட்சி தேர்தல் வேறு நடக்க உள்ளது. அதில் பேச்சாளர்கள் தயவு தேவை என்பதால் தீபாவளி பண்டிகை வெகுமதியே இப்போது வழங்கி இருக்கிறார்கள் என ஆதங்கமாக சொல்லிட்டு போயிருக்கிறார்கள். பிறகு அம்மா இல்லாத அதிமுக இனி அம்போ தான் எனக் கிளம்பி இருக்கிறார்கள்.