கிறிஸ்தவரா நீங்கள்? ஜெருசலேம் செல்ல ஓர் அரிய வாய்ப்பு!
அனைத்து கிறிஸ்து பிரிவினருக்கும், ஒருவருக்கு ரூபாய் 20 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும்
சென்னை: கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்கு புனிதப்பயணம் செல்ல மானியம் கோரி விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவித்துள்ளது.
2019-2020ஆம் ஆண்டுக்கான ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ள, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கிறிஸ்து பிரிவினருக்கும், ஒருவருக்கு ரூபாய் 20 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை.
www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, ‘இயக்குநர், சிறுபான்மையினர் நல இயக்ககம், கலசமஹால், சேப்பாக்கம், சென்னை-5’ என்ற முகவரிக்கு வரும் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.