கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் யுவராஜ் சிங்..? அதிர்ச்சியில் ரசிகர்கள் 

 

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் யுவராஜ் சிங்..? அதிர்ச்சியில் ரசிகர்கள் 

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

yuvraj singh

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் யுவராஜ் சிங், கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். 
இது தவிர ஐ.பி.எல் போன்ற உள்ளூர் தொடர்களிலும் யுவராஜ் சிங் தொடர்ந்து சொதப்பியதால் எதிர்வரும் உலககக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் யுவராஜ் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை. 
இதனால் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை யுவராஜ் சிங் எடுத்துவிட்டதாக பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

bcci

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ” முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக விரைவில் பிசிசிஐ அமைப்பிடம் பேசி முடிவு செய்ய உள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடரில் பங்கேற்க யுவராஜ் சிங் ஆர்வமாக இருக்கிறார். கனடாவில் நடக்கும் ஜிடி20 போட்டி, அயர்லாந்து, ஹாலந்து, கரீபியன் ஆகிய நாடுகளில் நடக்கும் டி20போட்டிகளில்விளையாட விருப்பமாக இருப்பதால், பிசிசிஐ அனுமதியைக் கோருகிறார்” என்றார்.
சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வரும் இந்த தகவல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.