கின்னஸுக்கான ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

 

கின்னஸுக்கான ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை: கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கமாகும். உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்யும் விதமாக  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் 2000 மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது. இந்த போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஜல்லிக்கட்டு வரலாற்றில் 2000 மாடுகள்  அவிழ்த்து விடப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால் இந்த போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.