காவி வேஷ்டி கட்டிய விஜய்: கொந்தளிக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்! 

 

காவி வேஷ்டி கட்டிய விஜய்: கொந்தளிக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்! 

பிகில் படத்தில் விஜய் காவி வேஷ்டி கட்டியது குறித்து கேள்வி கேட்டதற்கு , இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசமாகப் பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: பிகில் படத்தில் விஜய் காவி வேஷ்டி கட்டியது குறித்து கேள்வி கேட்டதற்கு , இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசமாகப் பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியானது. அதில் அவர் காவி வேட்டி கட்டி சிலுவை அணிந்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

இந்த நிலையில் ‘கேப்மாரி’ என்ற படத்தை இயக்கி வரும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘தேர்தலுக்கு முன்னர் எல்லோரும் காவி வேட்டி கட்டி அலையப் போகிறார்கள் என்று பேசினீர்கள், ஆனால் இப்போது உங்கள் மகன் விஜய் காவி வேட்டி அணிந்து நடித்து வருகிறார், இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கேள்வி எழுப்பினர்.

bigil

இதனால் கோபமடைந்த அவர் ஆவேசமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது, ‘நான் கூறிய கருத்தை என்னை பற்றி மட்டுமே மையப்படுத்தி கேள்வி கேளுங்கள். இதில் விஜய்யை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என்றார். 

sa

அதைத்தொடர்ந்து தொடர்ந்து, விஜய்யிடம் சென்று கேளுங்கள்,  உங்கள் அப்பா சொன்னதால் தான் காவி வேட்டி கட்டிக்கொண்டு நடித்தீர்களா? என்று ஆவேசமாகப் பதிலளித்தார். எஸ்.ஏ.சியின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.