காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு மணமகன் தற்கொலை: திருச்சியில் பரபரப்பு!

 

காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு மணமகன் தற்கொலை: திருச்சியில் பரபரப்பு!

இன்று திருமணம் நடைபெற இருந்த மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: இன்று திருமணம் நடைபெற இருந்த மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு வயது 30. ஐடிஐ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக நேற்று இரவு நிச்சயம் செய்யப்பட்டது. 

அதன்பின், உறவினர்கள் அனைவரும் திருமண வேலைகளை கவனித்து வந்துள்ளனர். இதற்கிடையே, மணமகன் மாயமாகியிருப்பது குறித்து குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது.

அதன்பின், மணமகன் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, அங்கு தன் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் தினேஷ் இருந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தினேஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இருவரின் சம்மதத்துடனே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக இரு வீட்டாரும் கூறும் நிலையில், தினேஷ் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

மேலும், தினேஷ் திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் தன்னை விட அதிகமாக படித்திருப்பதால் தாழ்வு மனப்பான்மையில் தினேஷ் தற்கொலை செய்து இருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.