காற்றாடியை பிரித்து காணாமல் போன கற்பழிப்பு குற்றவாளி! கோவையில் பரபரப்பு

 

காற்றாடியை பிரித்து காணாமல் போன கற்பழிப்பு குற்றவாளி! கோவையில் பரபரப்பு

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுப்பிரமணி, நெஞ்சு வலி காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கைதிகள் வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்தார். 

திருப்பூர் மாவட்டம் அருகிலுள்ள தாராபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுப்பிரமணி(31), மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுப்பிரமணி, நெஞ்சு வலி காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கைதிகள் வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்தார். 

coimbatore-govt-hospital

அதிகாலை 4 மணியளவில் காலைக்கடனை கழிக்க சென்ற சுப்பிரமணி திரும்பவில்லை. கழிப்பறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட வார்டில் உள்ள மற்ற கைதிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர், 

அங்கு சென்ற பார்த்தபோது வென்டிலேட்டரை உடைத்து அதன் வழியாக சுப்ரமணி தப்பிச் சென்றது தெரியவந்தது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கற்பழிப்பு குற்றவாளி தப்பியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது