கார் -பைக் மோதியதில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலி : வயிற்றில் இருந்த சிசுவும் இறந்த சோகம்!

 

கார் -பைக் மோதியதில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலி : வயிற்றில் இருந்த சிசுவும் இறந்த சோகம்!

முக்கூடலில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்து குமாரசாமியாபுரம் செல்வதற்காக பைக்கில் சென்றுள்ளார். 

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர்  அரசுடைமை வங்கி ஊழியராக உள்ளார்.  இவர் நேற்று அகஸ்தியர்பட்டியில் இருந்து முக்கூடலுக்குத் தனது காரில் சென்றுள்ளார். அதே சமயம் பாப்பாக்குடி குமாரசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  மாதவன்துரை என்ற கூலி தொழிலாளி அவரது நிறை மாத கர்ப்பிணி மனைவி ராஜேஸ்வரி மற்றும் 5 வயது மகன் பாரதிராஜா ஆகியோருடன் முக்கூடலில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்து குமாரசாமியாபுரம் செல்வதற்காக பைக்கில் சென்றுள்ளார். 

tt

இந்த இரு வாகனங்களும் கடையம் சாலையில் உள்ள அரிராம் நகர் விலக்கில் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் மாதவன்துரையும் அவரின் 5 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நிறை மாத கர்ப்பிணியான  ராஜேஸ்வரி ஆபத்தான முறையில் உயிருக்கு போராட 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் பலியானது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. 

ee

இதுகுறித்து நேரில் ஆய்வு செய்த பாப்பாக்குடி போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.