கார்த்தியின் 19வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

 

கார்த்தியின் 19வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவ் திரைப்படத்தையடுத்து தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கதாநாயகியே இல்லாத படத்தில் நடித்து வருகிறார்.

அதையடுத்து சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கும் கார்த்தியின் 19வது திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில்,கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

karthi

மேலும் கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படங்களை போன்று குடும்பமாக ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்படி இருக்கும் இப்படம் அமையும் என பட தெரிவித்துள்ளது.