காரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள்…மனைவி, மகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை!

 

காரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள்…மனைவி,  மகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை!

உயிருக்கு போராடியது நீரஜின் மகன் சூர்யா என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் யமுனா நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கார் ஒன்று சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. நீண்ட நேரமாக அந்த கார் அதே இடத்தில இருந்ததால் ரோந்து பணியிலிருந்த போலீசார் அருகில் சென்று பார்த்த போது  ஒரு குடும்பமே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், கார்கண்ணாடியை உடைத்து பார்த்த போது சிறுவன் ஒருவன் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ttn

விசாரணையில் இறந்தது டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் அகர்வால், அவரது மனைவி நேகா, மகள் தன்யா என்பதும் உயிருக்கு போராடியது நீரஜின் மகன் சூர்யா என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. நீரஜ் அகர்வால் தனது குடும்பத்தினருடன் காரில் வந்தநிலையில்  மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.  கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நீரஜ்அகர்வால் வங்கி கணக்கில் ரூ.123 கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறையினர் பல முறை அவரிடம் விசாரணை  நடத்தியுள்ளனர். மேலும் அவருக்கு தொழிலில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறை மட்டுமல்லாது பொருளாதாரக் குற்றப் பிரிவு, வணிக வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை என பலரிடம் விசாரணையில் சிக்கிய அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். 

ttn

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட வந்த அவர் மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். புத்தாண்டன்று ஒரு குடும்பமே இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.