காப்புக் கட்டுதலுடன் கோலாகலமாக இன்று தொடங்குகிறது தீப திருவிழா !

 

காப்புக் கட்டுதலுடன் கோலாகலமாக இன்று தொடங்குகிறது தீப திருவிழா !

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இதில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இதில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வர். இந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ttn

கடந்த 1 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 10 நாள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய விழாவான மகா தீபதிருவிழா 10ம் நாளான வருகிற 10ம் தேதி  நடைபெறுகிறது. அன்று மாலை  6 மணிக்குக் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். தீபதிருவிழாவன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேரமராக்கள் பொருத்தும் பணி  மேற்கொள்ளப்படுகிறது. ஆயிரக்  கணக்கான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட உள்ளனர். தீப திருவிழாவன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

ttn

10 நாள் கொண்டாடப்படும் இந்த விழாவின் கடைசி 7 நாள் மிகவும் சிறப்புப் பெற்றது. கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீப திருவிழா தொடங்கி விட்டது. இன்றிலிருந்து 7 ஆம் நாள் மகாதீபம் ஏற்றப்படும். அதற்காக, இன்று மாலை காப்புக்கட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. அதில், விநாயகருக்கும் மூலவருக்கும் காப்புக் கட்டப்படும். அதன் பின்னர் 7 நாள் திருவிழா கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.