காந்திக்கும் காங்கிரசுக்கும் தொப்புள்கொடி உறவு, பாஜகவுக்கு துப்பாக்கி உறவுதான்- கே.எஸ். அழகிரி

 

காந்திக்கும் காங்கிரசுக்கும் தொப்புள்கொடி உறவு, பாஜகவுக்கு துப்பாக்கி உறவுதான்- கே.எஸ். அழகிரி

காந்திக்கும் காங்கிரசுக்கும் தொப்புள்கொடி உறவு, பாஜகவுக்கு துப்பாக்கி உறவுதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

காந்திக்கும் காங்கிரசுக்கும் தொப்புள்கொடி உறவு, பாஜகவுக்கு துப்பாக்கி உறவுதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ். அழகிரி, “காந்திக்கும் காங்கிரசுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு, பா.ஜ.க வுக்கு துப்பாக்கி உறவுதான் உண்டு,  இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். தமிழக அரசு செயல் இழந்து விட்டது. தமிழகத்தில் உள்ள அடிமை அரசை அகற்றுவோம். மத்தியில் துக்ளக் ஆட்சி நடைபெறுகிறது.

ks alagiri

மோடி என்பது மாயை. தூத்துக்குடியில் கொலை நடந்த போது காவல்துறை என்ன செய்தது?. எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவில் பூங்காவையும் பால் பண்ணையும் மட்டுமே பார்த்தார். நாங்குநேரி தொகுதியில் கண்டிப்பாக காங்கிரஸ் வெற்றியடையும், வைகோ நாங்குனேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. நாங்குநேரி என்பது காங்கிரஸ் கட்சியின் கோட்டை.புதிய விடியல் மலர வேண்டும் என்றால் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற வேண்டும்” என்று கூறினார்.