காதல் அழியாதது… கவினின் புகைப்படத்தை கைகளில் ஏந்தி ரசிக்கும் லாஸ்லியா!

 

காதல் அழியாதது… கவினின் புகைப்படத்தை கைகளில் ஏந்தி ரசிக்கும் லாஸ்லியா!

கவினின் ஓவியத்தை லாஸ்லியா ரசித்து பார்த்துக்கொண்டிருப்பதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

கவினின் ஓவியத்தை லாஸ்லியா ரசித்து பார்த்துக்கொண்டிருப்பதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.  இலங்கையில் செய்தியாளராக இருந்த லாஸ்லியா திரையுலகில் நுழைவதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்தார். ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டினார். கவின் லாஸ்லியா காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு உள்ளது. ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவும் கவினும் இதுவரை தங்களது காதல் குறித்து வாய்திறக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து சந்திக்கவில்லை. அதற்கு காரணம் லாஸ்லியாவின் தந்தை போட்ட கண்ஷிஷன் என அண்மைஇல் செய்திகள் வெளியானது.

 

இந்நிலையில் லாஸ்லியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லாஸ்லியா கவினின் ஓவியம் ஒன்றை தனது கைகளில் வைத்து ரசித்து பார்க்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு கீழ் “உண்மையான காதல் என்றென்றும் நீடிக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.