காதலுடன் ஓடிய மனைவி -மைனரை மணம் செய்த கணவன் -மொத்தமா தூக்கிய போலீஸ் …

 

காதலுடன் ஓடிய மனைவி -மைனரை மணம் செய்த கணவன் -மொத்தமா தூக்கிய போலீஸ் …

அவரது புகாரை கவனத்தில் கொண்டு, காணாமல் போன அவரின் மனைவியை  போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 29 அன்று, கோயம்புத்தூரில் காணாமல் போன அவரின் மனைவி , வினோத் குமாருடன் குடும்பம் நடத்துவதை போலீசார் கண்டுபிடித்து விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்

பிப்ரவரி 7 ம் தேதி,ஹமீர் என்பவர்  தனது 21 வயது மனைவியை காணவில்லை என்ற புகாருடன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தை அணுகினார்.அவரது புகாரை கவனத்தில் கொண்டு, காணாமல் போன அவரின் மனைவியை  போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 29 அன்று, கோயம்புத்தூரில் காணாமல் போன அவரின் மனைவி , வினோத் குமாருடன் குடும்பம் நடத்துவதை போலீசார் கண்டுபிடித்து விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.ஹமீரும் அவரது மனைவியும் வசித்த அதே பகுதியில் வினோத் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

arrested

போலீசார் பிறகு நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு வயது 21 இல்லை 16 வயது மைனர் என்பதை அப்பெண்ணின் பிறப்பு சான்றிதழ் மூலம்  போலீசார் கண்டுபிடித்தனர் . இதனால் மைனர் பெண்ணை திருமணம் செய்ததால் காவல்துறையினர் புகாரளிக்க வந்த ஹமீர்,மைனர் பெண் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக ஹமீரின் பெற்றோர் மற்றும் திருமண மோசடி சட்டத்தில் சிறுமியின் தாயார் மீதும்,பெண்ணை கடத்தியதாக கள்ள காதலன் மீதும்  வழக்கு பதிவு செய்தனர்.