காதலுக்கு மறுப்பு தெரிவித்த காதலி.. ஆபாசப் படங்களைக் காதலியின் சகோதரிக்கு அனுப்பிய காதலன் !

 

காதலுக்கு மறுப்பு தெரிவித்த காதலி.. ஆபாசப் படங்களைக் காதலியின் சகோதரிக்கு அனுப்பிய காதலன் !

இரண்டு பேரும் கல்லூரி படித்துக் கொண்டு இருக்கும் போதில் இருந்தே, 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கோவை சிங்காநல்லூரில் உள்ளே விவேகானந்தா வீதியைச் சேர்ந்தவர் ரூபன். பட்டதாரியான இவர், சொந்தமாக வீடு கட்டி விற்பனை செய்து வருகிறார். ரூபனும் அப்பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் கல்லூரி படித்துக் கொண்டு இருக்கும் போதில் இருந்தே, 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர், ரூபனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால், ரூபன் மீது சந்தேகம் அடைந்த பெண் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். 

ttn

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத ரூபன், தன்னுடன் பேசுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரூபன் காதலிக்கும் போது அவர்கள் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் ஆபாச புகைப்படங்களை அந்த பெண்ணின் சகோதரி கைப்பேசிக்கு அனுப்பி வைத்துள்ளார். 

ttn

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சகோதரி, ரூபன் மீது  சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ரூபனின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவரை கைது செய்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், ரூபனை கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.