காதலுக்காக வாழும் கவின், லாஸ்லியா! இது அப்பா போட்ட கண்டிஷன்… 

 

காதலுக்காக வாழும் கவின், லாஸ்லியா! இது அப்பா போட்ட கண்டிஷன்… 

பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.  இலங்கையில் செய்தியாளராக இருந்த லாஸ்லியா திரையுலகில் நுழைவதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்தார்.

பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.  இலங்கையில் செய்தியாளராக இருந்த லாஸ்லியா திரையுலகில் நுழைவதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்தார். ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டினார். கவின் லாஸ்லியா  காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு உள்ளது. அவர்கள் விரைவில் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் இவர்களின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். 

 

ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவும் கவினும் இதுவரை தங்களது காதல் குறித்து வாய்திறக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து சந்திக்கவில்லை, வெளியிடங்களில் அதாவது ஏதேனும் நிகழ்ச்சிகளில் பார்த்தால் ஒரு சிரிப்பு கூட இவர்கள் முகத்தில் இல்லாமல் இருந்துள்ளது. இது கவின், லாஸ்லியா ஆர்மியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. லாஸ்லியா வீட்டில் கவினை ஏற்றுக்கொள்ளவில்லையா? இல்லை பெற்றோரில் பேச்சைக்கேட்டு லாஸ்லியா காதலை உதறி தள்ளிவிட்டாரா என்பது போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டனர். ஆனால் இவை அனைத்துமே பொய்யான தகவல்.  அவர் வெளியிடங்களில் பேசாததற்கும், பழகாததற்கும் காரணம் லாஸ்லியாவின் அப்பா போட்ட கண்டிஷன் தானாம்… அப்படி என்ன கண்டிஷனு பார்க்கலாம்.

Losliya

உங்கள் காதலின் உண்மை தன்மையை நிரூபிக்க சரியாக ஒரு வருடம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், பழகிக்கொள்ளாமல் இதே காதலுடன் இருந்து காட்டுங்கள். ஒரு வருடம் கழிந்த பின்பு நீங்கள் இதே அளவு காதலுடன் இருந்தால் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்பதே அந்த கண்டிஷன். இதற்கு தலைவணங்கிய கவின் லாஸ்லியா ஜோடி தற்போது அப்பாவின் வார்த்தைக்கும், தங்களது காதலுக்கும் உண்மையாக இருந்துவருகின்றனர்.