காதலியை திருமணம் செய்ய வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த இளைஞர்கள்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

காதலியை திருமணம் செய்ய வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த இளைஞர்கள்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதற்காக நண்பர்களுடன் சேர்ந்து  கொள்ளையடித்த இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை: காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதற்காக நண்பர்களுடன் சேர்ந்து  கொள்ளையடித்த இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னையைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவர் கடந்த 23-ம் தேதி குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்று பின்னர் 24-ம் தேதி மாலை வீட்டிற்கு திரும்பிவந்துள்ளார். அப்போது  வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போது வீட்டிலிருந்த விலை உயர்ந்த LED டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த சவுந்தர பாண்டியன் சென்னை தாம்பரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

theft

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த்தனர். அதனடிப்படையில்,  குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்லத்துரை, விக்னேஷ், மேரி மைக்கேல் ஆண்டனி ஆகிய மூன்று பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

arrested

அவர்களிடம் நடத்திய விசாரணையில், செல்லத்துரை, ஒரு பெண்ணை காதலித்து வந்தநிலையில் அவரை திருமணம் செய்ய ரூ. 10 லட்சம் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்த செல்லத்துரை, முதலில் மேற்கு தாம்பரம், பழைய ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தைத் திருடி உள்ளார். பின்னர் வாடகை  காரில், பூட்டிய சவுந்தரபாண்டியன் வீட்டை நோட்டமிட்ட இவர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் கடப்பாரையால் வீட்டின் பீரோவை உடைத்து பார்த்தபோது, அதில் பணம் இல்லாததால்  வீட்டில் இருந்த டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் கைதான மூன்று நபர்களையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.