காதலியை கரம் பிடித்தார் வாணி ராணி சீரியல் நடிகர்!

 

காதலியை கரம் பிடித்தார் வாணி ராணி சீரியல் நடிகர்!

நடிகர் மனாஸ் 10 வருடங்களாகக் காதலித்து வந்த நீரஜா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

சென்னை: நடிகர் மனாஸ் 10 வருடங்களாகக் காதலித்து வந்த நீரஜா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

சின்ன திரையில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்கிற சீரியலின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மானஸ் சாவலி. அதைத்தொடர்ந்து பல சீரியல் நடித்திருந்தாலும் நடிகை ராதிகாவின் வாணி ராணி சீரியல் மூலமே பிரபலமானார். அதையடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அரண்மனைக்கிளி’ சீரியலில் நடித்து வருகிறார். 

manas

இந்நிலையில் இவர் 10வருடங்களாகத் தனது தோழி  நீரஜாவை காதலித்து வந்துள்ளார். பின்பு இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க , கடந்த திங்கள் கிழமை சென்னையில் உள்ள திருமணம் மண்டபத்தில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது.இதில் பல்வேறு சீரியல் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

manas

இது குறித்து நீரஜா கூறியதாவது, நாங்க ரொம்ப  சந்தோஷமா இருக்கிறோம். 10 வருடமாக காதலிக்கும் போது எப்படி இருந்தோமோ அப்படி தான் இனியும் இருப்போம்.எங்களின் காதலை புரிந்து கொண்டு எங்களது பெற்றோர்களும் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லித் தான் திருமணம் நடைபெற்றது என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: ரசிகர்களின் கேள்விகளுக்கு கூச்சமே இல்லாமல் பதிலளித்த யாஷிகா! அப்படி என்ன கேள்வின்னு நீங்களே பாருங்க!