காதலித்த பெண்ணா..நிச்சயித்த பெண்ணா..யாருடன் திருமணம்?.. குழப்பத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு !

 

காதலித்த பெண்ணா..நிச்சயித்த பெண்ணா..யாருடன் திருமணம்?.. குழப்பத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு !

. மணிகண்டனும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் என்னும் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டனும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

ttn

இதனிடையே, மணிகண்டனின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளனர். இவர் பழைய காதலியுடன் பிரேக் அப் செய்து விட்டதால், நிச்சயித்த பெண்ணுடன் ஒரு நாள் வெளியே சென்றுள்ளார். மணிகண்டனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்ததையும், அவர் அந்த பெண்ணுடன் வெளியே சென்றதையும் அறிந்த பழைய காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்டனிடம் வற்புறுத்தியுள்ளார்.

ttn

அதனால், மனம் மாறிய மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து மணிகண்டன் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் அவர்கள் வீட்டில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான மணிகண்டன் யாரைத் திருமணம் செய்து கொள்வது என்று தெரியாமல் தவித்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.