காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்!

 

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்!

திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவரும் திருவல்லிக்கேணி ரோட்டரி நகரைச் சேர்ந்த பாபு என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த பெண் பாபுவுடன் பேசுவதை நிறுத்தி விட்டு விலகி சென்றதாக தெரிகிறது. இன்று வீட்டில் பெண் தனியாக இருந்தபோது பாபு வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. பெண் மறுத்ததால் ஆத்திரத்தில் பாபு மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணை இடது கை மற்றும் வலது கை, வலது கனுக்கால், இடது கனுக்கால் ஆகிய பகுதியில் வெட்டிவிட்டு ஓடி விட்டார். 

கத்திக்குத்து

அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து ராயப்பேட்டை போலீசார் இதுகுரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர்.