காதலர் தினம்: நாய்க்கு தாலி கட்டி எதிர்ப்பு தெரிவித்தவர் கைது

 

காதலர் தினம்: நாய்க்கு தாலி கட்டி எதிர்ப்பு தெரிவித்தவர் கைது

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் நாய்க்கு தாலி கட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் நாய்க்கு தாலி கட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் நாய்க்கு தாலி கட்டியுள்ளார். காதலர் தினம் என்றாலே இந்து முன்னணி முதல் சில இஸ்லாமிய இயக்கங்கள் வரை பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும். காதலர் தினத்தன்று ஏதாவது சர்ச்சையை கிளப்புவது இந்த கும்பல்களின் வழக்கம். இந்நிலையில் தர்ம ரக்ஷன சபா அமைப்பின் மாநில தலைவர் செல்வம், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாய்க்கு தாலி கட்டியுள்ளார்.

செல்வம், சென்னை கொருக்குப்பேட்டை மன்னப்ப தெருவில் வசித்து வருகிறார். இந்த தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வம் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.