காதலனை கண்ணாமூச்சி விளையாட அழைத்து கதையை முடித்த பெண்!

 

காதலனை கண்ணாமூச்சி விளையாட அழைத்து கதையை முடித்த பெண்!

பூன் என்ற பெண் அவரச உதவி எண்ணிற்கு போன்செய்து தனது காதலன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அந்த பெண்ணின்  மூலத்தின் படி, இருவரும் முந்தைய இரவில் மது அருந்தியதாகவும், ஹைட் அண்ட் சீக்  விளையாடும் போது காதலனை விளையாட்டிற்க்காக சூட்கேசில் வைத்து பூட்டியதாகவும் கூறியுள்ளார்.

கண்ணாமூச்சி விளையாடுவதற்காக காதலனை சூட் கேஸில் பூட்டிவைத்த காதலி சூட்கேஸில் கொலை குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

பூன் என்ற பெண் அவரச உதவி எண்ணிற்கு போன்செய்து தனது காதலன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அந்த பெண்ணின்  மூலத்தின் படி, இருவரும் முந்தைய இரவில் மது அருந்தியதாகவும், ஹைட் அண்ட் சீக்  விளையாடும் போது காதலனை விளையாட்டிற்க்காக சூட்கேசில் வைத்து பூட்டியதாகவும் கூறியுள்ளார்.

suitcase

வேடிக்கையாக இருக்கும் என்று நினைத்து காதலனை (டோரஸ்) சூட்கேஸில் வைத்து பூட்டி விட்டு மாடிக்குச் சென்றிருக்கிறார். பின்னர் இரவில் மாடிக்குச் சென்று தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அந்த பெண்ணின் செல்போனுக்கு பல அழைப்புகள் வந்திருந்தது, டோரஸ் இன்னும் சூட்கேஸில் இருப்பதாகவும், தான் சென்று பார்த்தபோது அவர் பதிலளிக்கவில்லை என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

woman-arrested

இருப்பினும், அந்த பெண் சொல்லியவை தொலைபேசியில் இருந்த வீடியோ ஆதாரங்களுடன் பொருந்தவில்லை. காதலன் சூட்கேஸிலிருந்து வெளிவர முயற்சிக்கும் போது கீழ்நோக்கி திருப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் அந்த பெண்ணின் பெயரை சொல்லி காப்பாற்று என்று கத்தியிருக்கிறார். அதைக் கேட்ட அந்தபெண் நன்றாக சிரித்திருக்கிறார். பின் “ இது நீங்கள் எனக்கு செய்த செயலுக்காக” என்றும் கூறியுள்ளார். “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று காதலன் கூற, அதற்கு அந்த பெண் ‘சீ வாயை மூடு’ என்றுள்ளார். பின்னர் சிரித்துக்கொண்டே நீங்கள் என்னை ஏமாற்றியபோது எனக்கும் இப்படி தான் இருந்தது” என்றுள்ளார். 

இதன் பின்னர் காவல்துறையினர் அந்த பெண்ணை இரண்டாம் நிலை கொலை வழக்கில் பதிவு செய்து கைது செய்தனர்.