காதலனுடன் சேர்ந்து கணவனை கார் ஏற்றி கொன்ற மனைவி: 10நிமிட ஆடியோவில் வெளியான உண்மை!

 

காதலனுடன் சேர்ந்து கணவனை கார் ஏற்றி கொன்ற மனைவி: 10நிமிட ஆடியோவில் வெளியான உண்மை!

புவனேஸ்வரியின் அண்ணனும் சேர்ந்து தன்னை தாக்கிவிட்டனர். நான் இறந்தால் அதற்கு அவர்கள் தான் காரணம் என்று கூறியிருந்தார். 

விழுப்புரம் அடுத்த காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும்,  இரு மகன்களும் உள்ளனர்.  கந்தசாமி தொண்டமா நத்தம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.  இதையடுத்து இவருக்கும்  இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக புவனேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 
 

ee

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி  காட்டேரிகுப்பத்திலிருந்து புதுச்சேரி டவுனுக்கு கந்தசாமி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இண்டிகா கார் ஒன்று அவர் பைக் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதை போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்தனர். ஆனால் கந்தசாமி தாயோ, என் மகன் விபத்தில் சாகவில்லை என்று கூறி ஆடியோ ஒன்றை போலீசார் வசம் ஒப்படைத்தார்.  அதில் இறப்பதற்கு ஒருவாரம் முன்பு கந்தசாமி தனது தாயை தொடர்புக்கொண்டு, என் மனைவியின் கள்ளக்காதலன் ஒட்டுநர் ஸ்ரீதர் , புவனேஸ்வரியின் அண்ணனும் சேர்ந்து தன்னை தாக்கிவிட்டனர். நான் இறந்தால் அதற்கு அவர்கள் தான் காரணம் என்று கூறியிருந்தார். 

rr

அதனடிப்படையில் விபத்து ஏற்படுத்திய இண்டிகா கார் ஓட்டுநர் பிரவீன்குமாரை பிடித்து விசாரித்ததில் கொலைக்கும் ஸ்ரீதருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.  அதாவது கந்தசாமி தனது நண்பரான ஸ்ரீதரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது ஸ்ரீதர் புவனேஸ்வரிக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த கந்தசாமி இருவரையும் கண்டிக்க, புவனேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மனைவியை அழைத்து செல்ல மாமனார் வீட்டுக்கு சென்ற போது, தன்னை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்துவதாக  புவனேஸ்வரி தனது அண்ணனிடம் சொல்ல அதனால் அவர் கந்தசாமியை அடித்துள்ளார். இருப்பினும் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்ததால்  புவனேஸ்வரி காதலன் ஸ்ரீதருடன் சேர்ந்து கணவனை கொலை செய்துள்ளார். இதை விபத்து என சித்தரிக்க நினைத்த நிலையில் கந்தசாமியின் ஆடியோவால்  இவர்கள் சிக்கியுள்ளனர்.  

இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலைவழக்காக மாற்றிய போலீசார் கந்தசாமி மனைவி புவனேஸ்வரி , கள்ளக்காதலன் ஸ்ரீதர், கார் ஓட்டுநர் பிரவீன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.