காதலனுடன் உல்லாசம்… கண்டித்தவரைக் கொலைச் செய்த பள்ளி மாணவி! 

 

காதலனுடன் உல்லாசம்… கண்டித்தவரைக் கொலைச் செய்த பள்ளி மாணவி! 

தமிழகத்தில் திரைப்படங்களின் தாக்கம், இணையதளங்களின் பயன்பாடு, சமூக வலைத்தளங்களின் பாய்ச்சல் போன்றவைகள் பல பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்க்கையையே சீரழித்து வருகின்றது. அப்படியானதொரு அதிர்ச்சி சம்பவம் கொடைக்கானல் பகுதியில் நடந்துள்ளது. கொடைக்கானல், பண்ணைக்காடு பகுதியை சேர்ந்தவர் (31). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியில் முருகன் என்பவரின் வீட்டில் வேலைப் பார்த்து வருகிறார்.

தமிழகத்தில் திரைப்படங்களின் தாக்கம், இணையதளங்களின் பயன்பாடு, சமூக வலைத்தளங்களின் பாய்ச்சல் போன்றவைகள் பல பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்க்கையையே சீரழித்து வருகின்றது. அப்படியானதொரு அதிர்ச்சி சம்பவம் கொடைக்கானல் பகுதியில் நடந்துள்ளது. கொடைக்கானல், பண்ணைக்காடு பகுதியை சேர்ந்தவர் (31). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியில் முருகன் என்பவரின் வீட்டில் வேலைப் பார்த்து வருகிறார். பின் முருகனுடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் ஒன்றாக அதே வீட்டில் வசிக்கத் துவங்கினர். இந்நிலையில், முருகன் சென்னையில் வேலை பார்ப்பதால் சுந்தரி மட்டும் மூன்று மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சுந்தரி தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

lovers

சுந்தரியின் மரணம் குறித்து, அவரது தாயார் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சுந்தரி இறந்த அன்று இரவு சுந்தரியின் வீட்டில் அதே பகுதியில் வசிக்கும் ராதா(16) எனும் மாணவி தங்கியதைக் கண்டு பிடித்தனர். பின்னர், பள்ளி மாணவி ராதாவை பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்லி பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில், தனது காதலனுடன் சேர்ந்து சுந்தரியை கொலைச் செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசாரின் விசாரணையில், ராதாவும், அதே பள்ளியில் ஒன்றாக படிக்கும் ராஜா எனும் மாணவனும் காதலிப்பதாகவும், இருவரும் அடிக்கடி சுந்தரியின் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று இருவரும் அப்படி தனிமையில் இருந்ததை சுந்தரி பார்த்துவிட்டு பெற்றோரிடம் சொல்வதாக கண்டித்ததாகவும் தெரிவித்தார்.

murder

மேலும், சுந்தரி பெற்றோரிடம் கூறிவிடுவார் என்று பயந்து, அவரை துப்பட்டாவால் காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலைச் செய்ததாக விசாரணையில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மாணவி ராதாவை கைது செய்து, மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள காதலனான பள்ளி மாணவன் ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி பருவத்தில் ஏற்பட்ட விபரீத காதலால், இருவருமே தங்களது எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு நிற்கின்றனர்.