காணாமல் போன 4 வயது சிறுவன் மயானத்தில் பிணமாக கிடந்த கொடூரம்: தேனியில் பரபரப்பு!

 

காணாமல் போன 4 வயது சிறுவன் மயானத்தில் பிணமாக கிடந்த கொடூரம்: தேனியில் பரபரப்பு!

 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 தேனி : 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு நான்கு வயதில் ஹரிஷ் என்ற மகன் உள்ளார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு  முருகனும் கீதாவும் பிரிந்து வேறுவேறு நபர்களைக்  திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்தனர். குழந்தை ஹரிஷ் மட்டும் கீதாவின் தாய் வீட்டில் வளர்ந்து வந்தான். இதனால் அவன் அடிக்கடி முருகன் மற்றும் கீதா வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளான். 

crime

இந்நிலையில் சிறுவன் ஹரிஷ்  நேற்று முன்தினம் திடீரென்று காணாமல் போன நிலையில் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கோம்பை காவல்நிலையத்தில்  உறவினர்கள்  புகார் கொடுத்தனர். இதையடுத்து  கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மயானம் ஒன்றில் ஹரிஷ் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். 

police

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.