காஞ்சனா வரிசையில் உருவாகும் மற்றொரு பேய் படத்தின் மூன்றாம் பாகம்

 

காஞ்சனா வரிசையில் உருவாகும் மற்றொரு பேய் படத்தின் மூன்றாம் பாகம்

அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக சினிமா ரசிகர்களிடையே ‘காஞ்சனா 3’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து, பலரும் பேய் படங்கள் எடுக்க திரும்பியுள்ளனர். அந்த வரிசையில் இயக்குநர் சுந்தர்.சியும் அதில் இணைந்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

kanchana 3

அதைத்தொடர்ந்து தற்போது ‘அரண்மனை 3′ எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து விஷால், தமன்னா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. 

kanchana 3

அப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு படக்குழு சென்னை திரும்பியது. அதையடுத்து இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு ‘அரண்மனை 3’ படத்தின் வேலைகளைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும் அரண்மனை 2ம் பாகத்தில் நடித்த திரிஷா, ஹன்சிகா ஆகியோர் 3ம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.