காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழை மக்களுக்கு அடிப்படை வருமான நிர்ணயம்: ராகுல் உறுதி

 

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழை மக்களுக்கு அடிப்படை வருமான நிர்ணயம்: ராகுல் உறுதி

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ராய்ப்பூர்: பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. 

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் ஊழலில் தொடர்புடைய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு இந்தியா, ஏழை விவசாயிகளுக்கு ஒரு இந்தியா என மத்தியில் ஆளும் பாஜக இரண்டு இந்தியாக்களை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

congress

அதேபோல், வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் எனவும், காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.