காங்கிரஸுடன் கூட்டணி அமைப்போம் : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிவிப்பு!

 

காங்கிரஸுடன் கூட்டணி அமைப்போம் : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சேலம் : மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், தீவிர அரசியலில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று வரும் கமல் ஹாசன் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.  இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல் ஹாசன்,  “தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது. காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்தக் கூட்டணி உடையும்  பட்சத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும்’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், ‘அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும். அ.தி.மு.க.வையும், தி.மு.க. வையும் மக்கள் நீதி மய்யம் சரிசமமாகத்தான் அணுகுகிறது’ என்று தெரிவித்தார்.