கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது திருநங்கை பாலியல் குற்றச்சாட்டு

 

கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது திருநங்கை பாலியல் குற்றச்சாட்டு

உடுமலை கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சக்திக்கும் தனக்கும் உறவு இருந்ததாக கவுசல்யாவுடன் திருநங்கை ஒருவர் செல்ஃபோனில் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: உடுமலை கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சக்திக்கும் தனக்கும் உறவு இருந்ததாக கவுசல்யாவுடன் திருநங்கை ஒருவர் செல்ஃபோனில் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

உடுமலைப்பேட்டையில் கவுசல்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் சங்கர் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கில், கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், சக்தி என்ற பறை இசைக் கலைஞரை கடந்த மாதம் கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகு போன்றவர்கள் முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். 

இந்நிலையில், கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த வகையில், கவுசல்யாவுடன் திருநங்கை ஒருவர் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

அதில், சக்தியை மிக கொச்சையாக பேசும் அந்த திருநங்கை, தனக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தனக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் முறையிடுகிறார்.