கவினை கேள்வி கேட்ட மதுமிதா: காதலனுக்காகப் பொங்கியெழுந்த லாஸ்லியா 

 

கவினை கேள்வி கேட்ட மதுமிதா: காதலனுக்காகப் பொங்கியெழுந்த லாஸ்லியா 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 கடந்த சில நாட்களாகவே போர் அடித்து வருவதாக ரசிகர்கள் ஒரு குற்றச்சாட்டு வைத்தனர். அதனால் ஆட்டத்தை மீண்டும் விறுவிறுப்பாக பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் என்ற பெயரில் மீண்டும் வனிதாவை வீட்டிற்குள் அனுப்பி கலவரத்தை உண்டுபடுத்தியுள்ளது. நேற்றைய எபிசோடில்  முகன், அபிராமி இடையே சண்டை மூடிவிட்டு வீட்டையே இரண்டு ஆக்கி விட்டார். 

இன்றைக்கான முதல் புரோமோவில்மதுமிதா, ஆண்கள், பெண்களைப் பயன் படுத்திக்கொள்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வைத்தார். அதனால் இன்று மதுமிதாவால் ஒரு சண்டை உள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் மதுமிதா, கவினிடம், ‘இந்த பிரச்சினைக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறீர்களா? யூஸ் பண்றது… உங்கள மாறி 4 பெண்களை யூஸ் பண்ணிக்கிட்டு உள்ளே இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’ என்று கவினின் பழைய விஷயத்தைக் கிளறியுள்ளார். இதனால் கடுப்பான தர்ஷன், ஷெரின், கவினுக்கு ஆறுதலாகக் ஆறுதலாக குரல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த லாஸ்லியா இதில் நானும் சமந்த பட்டுள்ளேன். அதனால் என்னை பற்றி நீங்கள் கதைக்க தேவையில்லை என்று பொங்கியெழுந்துள்ளார்.