கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கிட்ட யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் வலுவான போட்டியாளராக திகழ்ந்து மக்கள் மனதையும் வென்றார்.பிக் பாஸ் வீட்டிற்குள் மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். பின்பு இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் திரைப்படம் மட்டுமின்றி 18+அடல்ட் வெப் சீரியலிலும் நடித்து வருகிறார்.
weekend vibes ? pic.twitter.com/Fd4aeEDYsG
— Yashika Aannand (@iamyashikaanand) March 2, 2019
இந்நிலையில்,சமூகவலைத்தளத்தில் எப்போதும் படுஆக்டிவாக இருந்து யாஷிகா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் முதுகு முழுவதும் தெரியும்படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.