கழுத்தை முறித்து கணவனை சாக்கு பையில் மூட்டைக்கட்டிய பெண்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!?
குடித்து விட்டு தொல்லை கொடுத்த கணவரை கழுத்தை முறித்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: குடித்து விட்டு தொல்லை கொடுத்த கணவரை கழுத்தை முறித்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கால்வாயில் நெல்லித்தோப்பை சேர்ந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து விசாரணையைத் தொடர்ந்த அவரது மனைவி ஸ்டெல்லாவை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் விழுந்து கணவர் இறந்திருக்கலாம் என்று முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
இதனிடையே பிரேத பரிசோதனையில், கமலகண்ணன் தலையில் அடிபட்டு, கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இருப்பதும், பெண்ணின் கால்களால் அவரது முகம் மிதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனைவி ஸ்டெல்லாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதில், தினமும் குடித்து விட்டு தகராறு செய்த கணவர் கமலக்கண்ணன் சம்பவத்தன்றும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் கணவரை தாக்கியதில் சுவரில் மோதி கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொலையை மறைக்க தனது சகோதரி ஜெரினா மற்றும் அவரது ஆண் நண்பர் தமிழ் மணி என்பவர் துணையுடன் சாக்கு மூட்டைக்குள் அடைத்துள்ளனர். ஆனால் அதற்குள் தலையை அடைக்க முடியாத நிலையில் அவரது கழுத்தை காலால் மிதித்து முறித்து மூட்டைக்குள் அடைத்துள்ளார் ஸ்டெல்லா.பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று கழிவுநீர்க் கால்வாயில் வீசியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கமலகண்ணனின் மனைவி ஸ்டெல்லா, அக்கா ஜெரினா, அவரது நண்பர் தமிழ்மணி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீசார் மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர். குறிப்பாக தமிழ்மணி ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று, அண்மையில் பரோலில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.