கழிசடை நாக்கு…வெத்து வேட்டு… சீமானை போட்டுத் தாக்கி பொளேர்..!

 

கழிசடை நாக்கு…வெத்து வேட்டு… சீமானை போட்டுத் தாக்கி பொளேர்..!

சீமான் போன்ற உண்டியல் குலுக்கிகள் வாக்குகளை நாக்கால் மட்டுமே அறுவடை செய்து விடலாம் என்னும் நப்பாசை கொண்டு அலையும் நாலாந்தர பேர் வழிகள் மட்டுமே.

அத்து மீறும் நாக்கும், அருவறுப்பு போக்கும் ஆமைக்கறி சீமான் என போட்டுத் தாக்கி கடுமையாக விமர்சித்து இருக்கிறது நமது அம்மா நாளிதழ்.

 namadhu amma

ஜெயலலிதாவின் நினைவிடம் ஒன்றும் போதி மரம் அல்ல. அது புதைகுழி’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது அம்மா நாளிதழில் அத்து மீறும் நாக்கும்… அருவறுப்பு போக்கும் ‘’ என்கிற தலைப்பில் கட்டுரை  ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், ஆமைகறி சீமான் அம்மாவை பழிக்கிறாரே..? ஆம், விண்முட்ட வந்தாலும் விழி சிமிட்டா அந்த வீரத் திருமகள் எழுந்து வர மாட்டார் என்கிற தைரியத்தில் தான், ‘’அம்மாவின் நினைவிடம் ஒன்றும் போதி மரம் அல்ல புதை குழி’ என்று சீமான் போன்ற மக்களால் சீண்ட்டப்படாத வெத்து வேட்டுகள் விமர்சிக்கின்றனர். seeman

தெய்வத் திருமகளை விமர்சிக்கும் யோக்கிதை சீமான் போன்ற விட்டில் பூச்சிகளுக்கு கிடையாது.  கோடிக்கணக்கான தொண்டர்களும், தமிழினமும்  அம்மாவின் நினைவிடத்தை இமை நீர் கசிய இருகரம் கூப்பி வணங்குகிறார்கள் என்றால் அது கண்டு சீமான் போன்ற இத்துப்போன பித்துப் பிடித்த பேர் வழிகளுக்கு ஏன் வருகிறது எரிச்சல்.

  நாம் தமிழர், நீ தெலுங்கர் என்று மக்களை பிரிக்கும் மனித கோடாரியாகி ஒன்றும் அறியாத இளைஞர்களின் மூளையில் உணர்ச்சித் தீயை கொழுத்தி விட்டு உலகெங்கும் வசூல் செய்து வயிறு வளர்க்கும் சீமானுக்கு ஏன் வருகிறது நமச்சல்.   சீமான் போன்ற உண்டியல் குலுக்கிகள் வாக்குகளை நாக்கால் மட்டுமே அறுவடை செய்து விடலாம் என்னும் நப்பாசை கொண்டு அலையும் நாலாந்தர பேர் வழிகள் மட்டுமே.

 seeman

முடிந்தால் அண்ணாவைப்போல மக்கள் திலகத்தை போல எங்கள் மகாராசி தாய் போல தம்மை அர்ப்பணிக்கும் தவ வாழ்வை கடுகளவேணும் பின்பற்றிட முயற்சித்துப்பார். அதை விடுத்து மனிதர் என்பவர் தெய்வமாகலாம் என்னும் கவியரசர் வரிகளுக்கு உயிர் கொடுத்த தலைவர்களை இழிவாகவும், மலிவாகவும் விமர்சிப்பதை சீமான் உடனே நிறுத்திக் கொள்வது உத்தமம்.  இனியும் இதுபோல கழிசடை பேர் வழியாய் விமர்சனங்களை அவர் தொடர்வாரானால் இவர் போன்றோரின் நாக்கை புதைகுழிக்குப் பிறகு புழுக்களும் புறக்கணிக்கும் என்பதே நிச்சயம்’’ என கடுமையாக விமர்சித்துள்ளது.