கள்ளனாக மிரட்டும் கரு.பழனியப்பன்

 

கள்ளனாக மிரட்டும் கரு.பழனியப்பன்

நடிகர், இயக்குநர், அரசியல் பேச்சாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் கரு.பழனியப்பன். இவர்  சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கள்ளன்’. இப்படத்தை இயக்குநர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ளார். 

நடிகர், இயக்குநர், அரசியல் பேச்சாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் கரு.பழனியப்பன். இவர்  சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கள்ளன்’. இப்படத்தை இயக்குநர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ளார். 

karu pazhaniappan

இதில் கரு.பழனியப்பன் வேட்டை சமூகத்தைச் சேர்ந்த கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். நாயகியாக நிகிதா அறிமுகமாகிறார். இந்த படத்தை பற்றி எழுத்தாளர், இயக்குநர் சந்திரா கூறுகையில், ‘கதை, கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே, இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அதை அப்படியே உள்வாங்கியதுடன், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடற்பயிற்சி செய்து தன்னைத் தயார் படுத்திக்கொண்டார் கரு.பழனியப்பன். மிகவும் உணர்வுபூர்வமாக இந்தப் படத்தை இயக்கியிருப்பது பெரும்  நம்பிக்கையை தருகிறது. 

karu pazhaniappan

கள்ளன் திரைப்படம் இருவேறு காலங்களின் பின்னணியில் அமைந்த ஒரு கதை. 1988-89ல் ஒன்றும், 1975 ஆம் ஆண்டில் இன்னொரு கதையும் நடக்கும். வேட்டையாடும் சமூகம் நம்முடையது. ஆதி மனிதன் வேட்டையிலிருந்துதான் வாழ்வைத் தொடங்கினான்.அப்படியொரு மனிதனின் வாழ்க்கை பின்னையை மையமாக கொண்ட கதை. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களில் பயணிக்கிறது கதை. பரந்து விரிந்த நிலவியலும் காடுகளும் ரசிகர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தைத் தரும். மேலும் ‘கள்ளன்’ படத்தின் பாடல்களை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார், யுகபாரதியும், ஞானகரவேலும் எழுதியுள்ளனர். படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்று கூறியுள்ளார்.