கள்ளக்காதல் விவகாரம்: திமுகவை வம்பிழுக்கும் ஹெச்.ராஜா!

 

கள்ளக்காதல் விவகாரம்: திமுகவை வம்பிழுக்கும் ஹெச்.ராஜா!

சென்னை: மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர திமுக ஆட்சி தவறிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

திருமணமானவர்களுடன் ஓடிப்போகும் குற்றங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “திருமணமானவர்களுடன் ஓடிப்போகும் விவகாரம் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன: ஐகோர்ட். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தரும் நீதிபோதனை வகுப்புக்களை ரத்து செய்தனர். அறம் செய விரும்பு கூடாது என்று ஆத்திசூடி மை நீக்கினர். இதன் விளைவே இச்சூழ்நிலைக்கு காரணம்” என திமுகவை வம்பிழுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.