கள்ளக்காதல் விவகாரம்: குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு!

 

கள்ளக்காதல் விவகாரம்: குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள  அபிராமிக்கு ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 
சென்னை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள  அபிராமிக்கு ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை குன்றத்தூரை  சேர்ந்த வங்கி பணியாளரான  விஜய் என்பவரின் மனைவி அபிராமி பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால்  தனது இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்து கொலை செய்தார். இதையடுத்து  நாகர்கோவிலில் வைத்து கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் அவரது காதலன்  சுந்தரம் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

abirami

இந்நிலையில் சிறையில் உள்ள அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அபிராமி மீதான கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இன்று முதல் விசாரணை தொடங்க உள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

abirami

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காஞ்சிபுரம் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ளட்டும் என கூறி, அபிராமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.