கள்ளக்காதல் விவகாரம்: உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன் கைது!

 

கள்ளக்காதல் விவகாரம்: உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன் கைது!

குமரி மாவட்டம் தக்கலை அருகே உப்புமாவில் விசம் வைத்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை அருகே உப்புமாவில் விசம் வைத்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குமாி மாவட்டம் மேக்காமண்டபம் வியன்னூா் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தாா் ஜான் அலெக்சாண்டாின் மகள் திவ்யா சில்வெஸ்டா்(29) கருங்கலில் தனியாா் கல்லூாியில் பேராசிாியராக பணிபுாிந்து வந்தாா். இவருக்கும் வெள்ளிகோடு பகுதியை சோ்ந்த பெல்லாா்மினுக்கும் 5 மாதம் முன்பு  திருமணம் நடந்தது. பெல்லாா்மின் மாா்த்தாண்டத்தில் உள்ள ஓரு பொறியியல் கல்லூாியில் பேராசிரியராக பணிபுாிந்து வருகிறார். 

பெல்லாா்மின் அதே கல்லூாியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வருகிறாா். இது மனைவி திவ்யா சில்வெஸ்டா்க்கு தொியவர அவா் கணவனை கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. மேலும் பெல்லாா்மின் நான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என அடிக்கடி திவ்யா விடம் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை திவ்யாவுக்கு உப்புமா மற்றும் குளிர்பானத்தை பெல்லார்மின் பாசமாக கொடுத்துள்ளார். அதனைச் சாப்பிட்ட திவ்யா, மீதமுள்ளதைத் தனது வீட்டு நாய்க்கும் வைத்துள்ளார். 

இதற்கிடையே, உணவருந்திய சிறிது நேரத்தில் திவ்யாவுக்கு ரத்த வாந்தி வந்துள்ளது. உடனடியாக பெல்லார்மின் மற்றும் அவரது பெற்றோர்களை திவ்யா உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் உதவிக்கு வராததையடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து திவ்யாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், பெல்லார்மின் மற்றும் அவரது பெற்றோர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் திவ்யா கொடுத்த இறுதி வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே அவரது கணவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.