கள்ளக்காதலை கண்டித்த தாய்: தீயிட்டு கொளுத்திய மகள்: அதிர்ச்சி சம்பவம்!

 

கள்ளக்காதலை கண்டித்த தாய்: தீயிட்டு கொளுத்திய மகள்: அதிர்ச்சி சம்பவம்!

கள்ளக்காதலை கண்டித்ததால்  பெற்ற தாயையே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய மகளை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை: கள்ளக்காதலை கண்டித்ததால்  பெற்ற தாயையே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய மகளை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியம் துர்கா நகரில் வசித்து வருபவர் பூபதி. இவரது மகள் நந்தினிக்கு இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 6 வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் நந்தினி பழக்கம் வைத்துள்ளார். இது அவரது தாய் பூபதிக்குத் தெரிந்ததால் நந்தினியை கண்டித்துள்ளார். 

illegal

இதனால் ஆத்திரமடைந்த நந்தினி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் பூபதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, பின்னர் தனது தாய் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வதாக வெளியில் வந்து கூச்சலிட்டு நாடகம் செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனே அவரது பூபதியை  மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து குரோம்பேட்டை போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர். 

arrest

இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் பூபதி இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூற போலீசார் நந்தினியின் செல்போன் விவரங்களைச் சேகரித்தனர். அப்போது முருகன் என்பவருக்கு அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே நந்தினியைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தகாத உறவிற்கு தாய் பூபதி இடையூறாக இருந்ததால் காதலன் முருகன் தாயை கொலை செய்து விட  கூறியதாக  வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நந்தினி மற்றும் முருகனை கைது செய்த போலீசார் 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.