கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தையை கொடூரமாக கொன்ற தாய், கள்ளக்காதலன் கைது!

 

கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தையை கொடூரமாக கொன்ற தாய், கள்ளக்காதலன் கைது!

ஆரணி அருகே கள்ளக்காதலுக்கு பிறந்து  இரண்டு நாட்களே  ஆன பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரணி அருகே கள்ளக்காதலுக்கு பிறந்து  இரண்டு நாட்களே  ஆன பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் சோலையம்மாள் தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை மற்றும் மூன்று ஆண் குழந்தை மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சோலையம்மாளுக்கு கடந்த 14 ஆம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் 5வதாக  ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சோலையம்மாள் அந்தப் பெண் குழந்தையுடன் 16ஆம் தேதி மருத்துவமனை இருந்து தலைமறைவானதால் அரசு மருத்துவமனை மருத்துவர்  ஆனந்தன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  புகாரின்பேரில் விசாரணை செய்த ஆரணி கிராமிய காவல்துறையினர் சோலையம்மாளை  கைது செய்து விசாரித்தனர்.

murder

விசாரணையில் சோலையம்மாளுக்கும் அவரது கணவனின் அண்ணன் பாபுவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. கள்ளத்தொடர்பில் பிறந்த தவறான பெண் குழந்தை என்பதால் சோலையம்மாவும் பாபுவும் பச்சிளங் பெண் குழந்தையை கொன்று சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு விளை நிலத்தில் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்தன. இதனால் ஆரணி கிராம காவல்துறையினர் பாபு மற்றும்  சோலையம்மாள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..