கள்ளக்காதலுக்கு இடையூறு… மூன்று வயது சிறுமியை கொலை செய்த காதலன் தலைமறைவு!

 

 கள்ளக்காதலுக்கு இடையூறு… மூன்று வயது சிறுமியை கொலை செய்த காதலன் தலைமறைவு!

மேட்டுபாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரூபிணி.திருமணம் ஆகி,ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.ஒரு நாள் பின்னிரவு நேரத்தில் அவரது போனுக்கு ஒரு கால் வந்திருக்கிறது.பேசிய நபர் தன்னோட பெயர்  தமிழ் என்று சொல்லிப் பேசியிருக்கிறான்.

மேட்டுபாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரூபிணி.திருமணம் ஆகி,ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.ஒரு நாள் பின்னிரவு நேரத்தில் அவரது போனுக்கு ஒரு கால் வந்திருக்கிறது.பேசிய நபர் தன்னோட பெயர்  தமிழ் என்று சொல்லிப் பேசியிருக்கிறான்.

girl

அவன் கேட்ட விவரங்களுக்கு முதலில் ராங் நம்பர் என்று சொல்லி கோபத்தோடு போன் அழைப்பைத் துண்டித்திருக்கிறார். “இல்லைங்க…நான் சொல்ல வர்றது என்னனா…’ என்று அர்த்த ராத்திரியில் அவன் வீசிய வார்த்தை வலையில் சிக்கி,தன்னோட சொந்தக்கதை சோகக்கதை, கணவனோடு என்ன பிரச்சினை என்பதுவரை என்பதுவரை எல்லாத்தையும் சொல்லியிருக்கிறார்.
அப்புறம் என்ன…அதுவே இருவரையும் நேரில் ‘சந்திக்கிற’ அளவுக்கு கொண்டு போயிருக்கிறது.சந்திப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை ‘இனிமேல் நீ தனியா இருக்க வேண்டாம்’ என்று சொல்லி சரவணம்பட்டிக்கு அழைத்திருக்கிறான்.ரூபிணியும் நம்பி வந்திருக்கிறார். இரவு முழுவதும் தனிமையில் இருந்திருக்கிறார்கள்.

murder

காலையில் வெளியில் போகலாம் என்று ரூபிணியையும் அவரது மகளையும் அழைத்துக்கொண்டு வந்தவன்,ஓரிடத்தில் பேக்கரி வாசலில் ரூபினியை இருக்கச் சொல்லிவிட்டு குழந்தையை அவனது அம்மா வீட்டில் விட்டுவிட்டு வருவதாகச் சொல்லி அழைத்துப் போயிருக்கிறான்.
போய் வெகு நேரமாகியும் ஒருத்தன் வரலையே என்ற கவலையே இல்லாமல் கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் முருகன் கோவில் முட்புதரில் யாரோ ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள் என்ற செய்தி தெரிந்து போய் என் குழந்தைதான் என்று அடையாளம் காட்டியிருக்கிறார்.
இரவு முழுவதும் இவர்களது தனிமைக்கு தொந்தரவாக அழுது கொண்டே இருந்ததாம் அந்தக் குழந்தை.அதனால்,இப்படிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கிறான் தமிழ்!
கூடா நட்பால் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு இப்போது அழுது புழம்பிக்கொண்டிருக்கிறார் ரூபிணி.