கள்ளக்காதலால் நேர்ந்த அவமானம்!  செல்போன் கோபுரத்தில் ஜோடியாக தற்கொலை!

 

கள்ளக்காதலால் நேர்ந்த அவமானம்!  செல்போன் கோபுரத்தில் ஜோடியாக தற்கொலை!

மனைவி, ஐந்து குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர் ஆரணியைச் சேர்ந்த 38 வயதான சுதாகர். சந்தோஷமாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் தேன்மொழி என்கிற பெண் வந்ததும் ஆனந்தமான இவர்களது குடும்பம் தடம் புரளத் துவங்கியது.

மனைவி, ஐந்து குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர் ஆரணியைச் சேர்ந்த 38 வயதான சுதாகர். சந்தோஷமாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் தேன்மொழி என்கிற பெண் வந்ததும் ஆனந்தமான இவர்களது குடும்பம் தடம் புரளத் துவங்கியது. சுதாகரின் எதிர் வீட்டிற்கு குடிவந்த 43 வயதான தேன்மொழிக்கும் திருமணமாகி மூர்த்தி என்ற கணவரும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

suicide

வயதுக்கு வந்த பிள்ளைகள் இருப்பதை எல்லாம் இவர்களது கள்ளக்காதல் மறைத்து விட்டது. இருவருமே நீண்டகாலமாக திருமணமானதையும், குழந்தைகள் இருப்பதையும் மறந்து விட்டு வருடக்கணக்கில் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலில் திளைத்துள்ளனர். நீண்ட காலமாகவே கள்ள உறவு இருந்துள்ள நிலையில், இவர்களது உறவு குறித்து இருவீட்டாருக்கும் தெரிய வந்து, இருவரையுமே அவர்களது உறவினர்கள் கண்டித்துள்ளனர். அக்கம்பக்கத்தினருக்கும் தங்களது கள்ளக்காதல் பற்றி தெரிந்ததால், அவமானம் தாங்க முடியாமல் இருவருமே மனவேதனையுடன் வீட்டிற்குள் முடங்கிப் போனார்கள். இந்நிலையில், இருவரும், அருகே இருந்த உயர்மின் கோபுரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.