களைகட்டும் தர்பார்…ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்ட பிரபல திரையரங்கம்!

 

களைகட்டும் தர்பார்…ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்ட பிரபல திரையரங்கம்!

இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

ttn

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ttn

முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கான புரோமோஷன் தமிழகம் மட்டுமின்றி மும்பையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

ttn

இந்நிலையில் தர்பார் படம்  திரைக்கு வரும் நாளான வரும் 9 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி கோரி சேலம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மெய்யனுர் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கம் முன்பு  மலர்தூவ அனுமதி கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.