கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.. தொடரும் மரணங்கள் !

 

கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.. தொடரும் மரணங்கள் !

சமீப காலமாக கல்லூரி மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

சமீப காலமாக கல்லூரி மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் சென்னை ஐஐடி கல்லூரி மாணவி பாத்திமா லத்தீப் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம், அக்கல்லூரியில் பணியாற்றி வந்த 3 பேராசிரியர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் பூதாகரமாக வெடித்தது.

ttn

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேனியைச் சேர்ந்த மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு நர்சிங் பயின்று வந்த மாணவி நேற்று முன்தினம் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை அவர் அறைக்குச் சென்ற சக மாணவிகள் அந்த மாணவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ttn

இதனையடுத்து, அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கல்லூரி முதல்வர் வீட்டுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்குச் சென்ற போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைத்தனர். அந்த மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியாததால், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.