கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட 20 வயது பெண்: போலீசார் முன்னிலையில் நடந்த திடீர் திருமணம்!

 

கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட 20 வயது பெண்: போலீசார் முன்னிலையில் நடந்த திடீர்  திருமணம்!

இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து கோகிலா கர்ப்பமாகியுள்ளார். 

திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின்  மகள் கோகிலா. 20 வயதான இவர் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே கோகிலாவும் அதேபகுதியைச் சேர்ந்த  செங்கேணி மகன் பரமசிவம் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.  இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து கோகிலா கர்ப்பமாகியுள்ளார். 

ttn

இதையறிந்த கோகிலாவும் காதலன் பரமசிவனும் பயந்து போக வீட்டில் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்.  வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வது வீட்டுக்கு வருவது என கோகிலா இயல்பாக இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் நிறைமாத  கர்ப்பிணியாக மாற, நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

ttn

இதை தொடர்ந்து அவர்   ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோகிலாவுக்கு ஆண்  குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாமலே மகள் குழந்தை பெற்றதால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் ஒலக்கூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கோகிலா குழந்தை அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது.

ttn

பின்னர் பரமசிவம் மற்றும் கோகிலா ஆகிய இருவருக்கும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் பெற்றோர், போலீசார் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.