கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்!

 

கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்!

நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 

நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆந்திராவிலுள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் இன்று காலை முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர். ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தார். சென்னையில் மட்டும் இவருக்கு 20 இடங்களில் கிளைகள் உள்ளன.

IT Raid

கோவர்த்தனபுரத்தில் கல்கி மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்திலும்  வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று காலையிலிருந்து தற்போது வரை கணக்கில் காட்டப்படாத ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், ஆப்பிரிகாவில் அதிகளவில் நிலம் வாங்கியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.