கலாநிதி மாறன், நடிகர் விஜய் இடையே மோதல்!

 

கலாநிதி மாறன், நடிகர் விஜய் இடையே மோதல்!

நடிகர் விஜய்க்கும், சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனுக்கும் இடையே சர்கார் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மோதல் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்க்கும், சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனுக்கும் இடையே சர்கார் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மோதல் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சர்கார் திரைப்படத்தை தயாரித்தவர் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக அறியப்பட்ட முரசொலி மாறனின் மகன் ஆவார்.

இவர் தயாரித்த ‘சர்கார்’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமை 118 கோடி ரூபாய்க்கு தேனாண்டாள் நிறுவனம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ‘மெர்சல்’ படத்தை வெளியிட்ட, தேனாண்டாள் நிறுவனத்திற்கு 30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனை ஈடுகட்டுவதற்காக ‘சர்கார்’ படம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், அப்படத்திற்கான முழுத் தொகையை தேனாண்டாள் நிறுவனம் சன் பிக்சர்சுக்கு வழங்கியதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சன் நிறுவனம், படத்தை தீபாளிக்கு ரிலீஸ் செய்யாமல்  நிறுத்தி வைக்கலாம் என ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் காதுகளுக்கு சென்றதையடுத்து, படத்தை சுமூகமாக வெளியிடுமாறு, இரு தரப்பினரையும் கேட்டிக் கொண்டுள்ளார்.

அதன்பின்னும் தேனாண்டாள் நிறுவனத்தின் தலைவர் ராமநாராயணனின் மகன் முரளியை அழைத்த சன் பிக்சர்ஸ், முழு பணத்தை தரும் வரை, அதற்கு நிகரான சொத்துக்களை எழுதித் தருமாறு கேட்டதாகவும் அவரும் அதுபோன்று எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தீபாவளியன்று, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விஜய்க்கு சன் டிவி அழைப்பு விடுத்ததாகவும், அதனை விஜய் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கருணாநிதி குடும்பத்திற்கு ராமநாராயணன் நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில், கலாநிதி மாறன் அவரையே மிரட்டி பேரம் பேசியதும், விஜய்யை மிரட்டியதாக கூறப்படும் செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.