கலர்ஸ் தமிழில் வெளியான ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறதா? அதிர்ச்சி பின்னணி!

 

கலர்ஸ் தமிழில் வெளியான ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறதா? அதிர்ச்சி பின்னணி!

நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோ ‘கோடீஸ்வரி’ கலர்ஸ் தமிழ் சேனலில் வெளியானது. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த மாதம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கௌசல்யா கார்த்திகா பங்கேற்று அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்து ரூ .1 கோடி ரூபாயை தட்டிச் சென்றார்

நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோ ‘கோடீஸ்வரி’ கலர்ஸ் தமிழ் சேனலில் வெளியானது. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த மாதம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கௌசல்யா கார்த்திகா பங்கேற்று அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்து ரூ .1 கோடி ரூபாயை தட்டிச் சென்றார். இந்த குறிப்பிட்ட எபிசொட் தமிழகம் முழுவதும் மிகவும் ட்ரெண்ட் ஆனது. 

kodeeswari-02

கோடி ரூபாய் பரிசளிக்கும் ரியாலிட்டி ஷோவை ஒரு பெண் தொகுத்து வழங்குவது இதுவே முதல் முறை. 30 எபிசோட்களை கடந்து வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை அதன் 40 வது எபிசோடுடன் நிறுத்திக் நிறுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

 

கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சியின் பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி எபிசோடில் நடிகை சரோஜா தேவி மற்றும் ராதிகாவின் தாய் கீதா ராதா ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சரத்குமார், வரலக்ஷ்மி சரத்குமார், மீனா, ராதா உள்ளிட்ட பல பிரபலங்கள் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். அவர்கள் வெல்லும் ரொக்கப் பரிசு தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

 

கோடீஸ்வரி நிகழ்ச்சி 40-வது எபிசொட் பிப்ரவரி 14 அன்று ஒளிபரப்பாக இருக்கிறது. அன்றுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது