கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்த கணவன்…இறந்துவிட்டார் என்று நினைத்து தூக்கிட்டு தற்கொலை!

 

கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்த கணவன்…இறந்துவிட்டார் என்று நினைத்து தூக்கிட்டு  தற்கொலை!

இதில் விருப்பம் இல்லை என்பதால் தொடர்ந்து மனைவியை வற்புறுத்திவந்துள்ளார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவருக்கு ராணி என்ற மனைவியும்,  2 மகள்களும், 5 மகன்களும் உள்ளனர். காத்தவராயன் தனது மனைவி மற்றும் மூத்த மகள் சித்ராவுடன்  பல்லடம் சேடபாளையத்தில்  மூலைதோட்டம் பகுதியில் தங்கி அங்குள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

அங்கு வேலைபார்த்து வந்த திண்டுக்கல் மாவட்டம், குட்டப்பட்டியை சேர்ந்த ஹென்றி ரொசரியாவுக்கும் சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு அதேபகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

ttn

இதனிடையே மனைவியுடன் சொந்த ஊருக்கு சென்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஹென்றி ரொசரியா விரும்பியுள்ளார். இதுகுறித்து வீட்டில் கேட்க, கர்ப்பமாக இருப்பதால் வீண் அலைச்சல் வேண்டாம். இங்கேயே கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்று சித்ராவின் பெற்றோர் கூற, அதற்கு சித்ராவும் சம்மதித்துள்ளார். ஆனால்  ஹென்றி ரொசரியாவுக்கு இதில் விருப்பம் இல்லை என்பதால் தொடர்ந்து மனைவியை வற்புறுத்திவந்துள்ளார். 

ttn

இந்நிலையில் நேற்று காலை மாமனாரும், மாமியாரும் வேலைக்கு சென்ற பிறகு  சொந்த ஊருக்கு  போவது குறித்து கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த ஹென்றி ரொசரியா சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவி சித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்தம் பீறிட்டு வரவே  சித்ரா மயங்கி விழுந்துள்ளார்.  ஆத்திரத்தில்  மனைவியை கொலை செய்து விட்டோமே என்று  நினைத்து ஹென்றி ரொசரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த சித்ரா கணவன் தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழ அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சித்ரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.