“கர்ப்பமா இருக்கும் போது கூடவா இப்படி செய்வே” -கணவனால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி

 

“கர்ப்பமா இருக்கும் போது கூடவா இப்படி செய்வே” -கணவனால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி

கர்ப்பிணி மனைவி மீது சந்தேகப்பட்ட ஒரு கணவன், அவரை கொன்று உடலை இரண்டு நாள் வீட்டிலேயே வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார்

“கர்ப்பமா இருக்கும் போது கூடவா இப்படி செய்வே” -கணவனால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி


டெல்லிக்கு அருகிலுள்ள உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் ரஜினிகாந்த் தீட்சித் என்ற 28 வயதான பொறியாளரும் ,குஷி என்ற 25 வயதான பெண்ணும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் .அதன் பிறகு அவரின் மனைவி குஷி கர்ப்பமானார் .இப்போது எட்டு மாத நிறை மாத கர்ப்பிணி மனைவியின் மீது ,அந்த கணவர் தீக்ஷித்துக்கு சந்தேகம் வந்தது .இதற்கு காரணம் அவர் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரை வீட்டுக்கு வரவைத்து பேசிக்கொண்டிருந்தார் .
இதை அந்த குஷியின் கணவர் தீக்ஷித் பார்த்து விட்டார் .அதனால் அவர் குஷியிடம் கேட்ட போது, அவர் கணவர் சந்தேகப்படுவார்ர் என்று பயந்து கொண்டு சரியாக பதில் சொல்லவில்லை .இதனால் அந்த கணவருக்கு சந்தேகம் வந்துள்ளது .அதனால் இருவருக்குமிடையே சண்டையும் வந்துள்ளது .கடந்த சனிக்கிழமையன்று இதே போல இருவருக்கும் மனைவியின் ஆண் நணபர்கள் விஷயமாக மீண்டும் சண்டை வந்தது .அப்போது இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தில் அந்த கணவர் தீக்ஷித் தன் மனைவி குஷியை கொன்று விட்டார் .பின்னர் அவரின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார் .அதனால் அந்த உடலை முதலில் கழிவு நீர் தொட்டியில் வீச முயன்றுள்ளார் ,பின்னர் வீட்டிற்குள் வைத்து கொண்டு இரண்டு நாள் அவதிப்பட்டார் .பிறகு வீட்டின் மாடிக்கு அடியில் புதைக்க முயன்றார், அதற்காக அவர் தரையின் ஒரு பகுதியை தோண்டினார்.பின்பு அதிலும் தோல்வியுற்றதால் வீட்டிலேயே அவரின் உடலை வைத்துக்கொண்டிருந்தார் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிந்து மனைவியை கொன்ற கணவர் தீக்ஷித்தை கைது செய்தார்கள் .இப்போது போலீஸ் விசாரணையில் இறந்த பெண்ணுக்கு ஹரியானா மாநில வாலிபருடன் திருமணதிற்கு முன்பு தொடர்பு இருந்ததை கண்டறிந்துள்ளார்கள் .

“கர்ப்பமா இருக்கும் போது கூடவா இப்படி செய்வே” -கணவனால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி
rep image